இடுகைகள்

அண்மைய பதிவு

ஒரு பிதாமகரின் அஸ்தமனம்

படம்
  எ ன் தந்தையார் சிறுவயதிலேயே எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த உன்னதமான அவருடைய நண்பர்களில் முதன்மையானவர் டாக்டர் சம்பந்தம். வெறும் குடும்ப மருத்துவராக மட்டுமன்றி எனக்கும் என் தம்பிக்கும் ஒரு பெரியப்பாவாக, நலம்விரும்பியாக, வழிகாட்டியாக, நண்பராகப் பழகியவர். வாழ்க்கை எனும் குருஷேத்திரப் போரில் பீஷ்ம பிதாமகராக என்னருகே நின்று எனக்கு வழிகாட்டியவர்; ஜாம்பவானாக என்னுடைய பலத்தை எனக்கு நினைவூட்டியவர்; எத்தனையோ தருணங்களில் மனம் சஞ்சலமடைந்து இந்த உலகின் மீது வெறுப்புற்று விடுபட எண்ணிய போது கண்ணனாக கீதோபதேசம் செய்து, என் அகக் கண்களைத் திறந்து வைத்து என் வாகனத்தின் திசையை மாற்றிவிட முயன்று என் சாரதியாகத் திகழ்ந்தவர். பார்த்த சாரதி அவர். இன்றைக்கு நான் நானாக இருந்து பலருக்கு வழிகாட்டுவதற்கும், என்னுடைய இன்றைய நிலைக்கு முக்கியமானதொரு காரணமாகவும் இருந்தவர். நான் நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என்று அலைந்தவர். உண்மையில் இவற்றையெல்லாம் அவருடைய மகன்களுக்குக்கூட செய்திருப்பாரா என்பது சந்தேகமே. பார்த்த சாரதி என்று கூறினேன். உண்மைதான். இளம் வயதில் அடிக்கடி மனம் சஞ்சலமடைபவனாக இருந்திருக்கிறேன். அவருடைய மர

எழுத்தாளர் அ.முத்துலிங்கம் - வாசகர் சந்திப்பு காணொளி

படம்
ஐ ந்து வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களிடமிருந்து ஒரு கடிதம். உண்மையிலேயே அது அவருடைய மின்னஞ்சல்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். அவ்வளவு அவநம்பிக்கை. கடிதம் என் கண்ணில் பட்டதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே அதை அனுப்பி இருக்கிறார். நான்தான் தாமதமாகப் பார்த்திருக்கிறேன். என்னுடைய சிறுகதைத் தொகுப்பை வாசித்துவிட்டு கடிதம் எழுதியிருந்தார். சென்னைப் புத்தக விழாவில் எனக்கு அறிமுகமான நண்பன் இளங்கோ கனடாவில் வசித்து வருபவர். அவருடைய தமிழ் எழுத்து நடைக்கு நான் ரசிகன். இளங்கோவின் முகவரியைப் பெற்று அவருக்கு என்னுடைய புத்தகத்தை அனுப்பி வைத்து, "எழுத்தாளர் அ.முத்துலிங்கத்திடம் இதைத் தர முடியுமா?" என்று கோரிக்கை வைத்தேன். "புத்தகம் வந்து சேர்ந்தது. நிச்சயம் அடுத்த முறை அவரைச் சந்திக்கும்போது தருகிறேன்" என்று உறுதியளித்தார். அதன் பிறகு இளங்கோவிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. புத்தகம் அ.முத்துலிங்கத்தை சென்றடையும்; அவர் அதை வாசிப்பார் என்றெல்லாம் எந்தவித எதிர்பார்ப்பையும் நான் வைத்துக்கொள்ளவில்லை.. ஒரு காலத்தில் அவருடைய தளத்துக்குச் சென்று வாசிப்

நிலவு தேவதை

படம்
Rotterdam Film Festival : Jerome, Nilavazhagan, Arun Karthick, Madhavan.  பி ம்பங்கள் பற்றி நண்பர் நிலவழகன் சுப்பையா ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதைப் பற்றி பேசுவதற்கு முன்பு அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு. ஜெர்மனியில் வசித்து வரும் அவர் ஒரு திரைப்பட ஆர்வலர். ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் அருண் கார்த்திக் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பிறகு வாட்சேப்பிலும் முகநூலிலும் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தாலும், ஒரு நாள் தொலைபேசி வழியே பேசிய பிறகே நெருக்கமானோம். என்னுடைய மகன் சாயின் காணொளிகளைத் தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறார். குறிப்பாக " பைசைக்கிள் தீவ்ஸ் " திரைப்படம் பற்றிய அவனுடைய காணொளியைப் பார்த்துவிட்டு அழைத்திருந்தார். நீண்ட நேரம் அவனுடைய எல்லா காணொளிகளைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு வியப்பாக இருந்தது. பைசைக்கிள் தீவ்ஸ் காணொளியை பல நண்பர்களிடம், உறவினர்களிடம் பகிர்ந்திருக்கிறேன். சிலர் பாராட்டினார்கள். சிலர் பதில்கூட சொல்லவில்லை. அதில் எந்த வருத்தமுமில்லை. ஏனெனில் இஃதொன்றும் புதிதில்லை. பொதுவாகவே குழந்தைகள் மீது இந்தியர்களுக்கு ஒரு அலட்ச

யூட்யூப் இணைப்புகள்

படம்
ச மூக வலைத்தளங்களில் இல்லாத நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க என்னுடைய அண்மைய காணொளிகளை யூட்யூபில் தரவேற்றியிருக்கிறேன். குழந்தைகளுடன் உரையாடல் புத்தக வாசிப்பு : https://youtu.be/y8CcKqzi7H4 விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி? : https://youtu.be/n6OmNeIkA88 நளபாகம் மிளகுக் குழம்பு : https://youtu.be/7QaA7JbRVJY குஸ்கா : https://youtu.be/Xx2EUdNB8hs மலபார் சுலைமானி : https://youtu.be/7Ap5t043dXM குல்ஃபி : https://youtu.be/zawg-VhwYyo இளமை திரும்புதே (Parents version) https://youtu.be/Vqn87Hpo4R8 இயக்குநருடன் ஒருநாள் - ஆவணப்படம் https://madhavan-elango.blogspot.com/2020/06/blog-post_21.html நண்பர்களின் நலம்விரும்பிகளின் அன்புக்கும் ஊக்கமூட்டலுக்கும் என் மனமார்ந்த நன்றி!

அந்நியன்

படம்
கு ழந்தைகள் எத்தனை வேகமாக வளர்கிறார்கள். முகநூல் ஒரு குளிர்பதனப் பெட்டியைப் போன்று தனக்குள் சேமித்து வைத்திருக்கும் நினைவுத்துண்டுகளை அவ்வப்போது அள்ளித் தருகிறது. அவற்றை மிகக் கவனமாகக் கைகளில் ஏந்தி, உருக வைத்து துளியும் சிந்தாமல் பருகுகிறேன். மகனுக்கு அப்போதெல்லாம் மிகவும் பிடித்தமான தண்ணீர் விளையாட்டுக்குக்கூட என் உதவி தேவைப்பட்டிருக்கிறது. நேற்றைக்கு சத்யஜித் ரேயின் "ஆகந்துக்" திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது, " என்னப்பா, படம் முழுவதும் உன் புராணமாக இருக்கிறது?" என்று சிரித்துக்கொண்டே என் சிந்தனைகளை விமர்சிக்கிறான். "வாழ்க்கை என்பது அப்பாவாக ஆகிக்கொண்டே இருப்பது" என்கிற ஒரு வரியைக் கண்டடைந்ததாக ஜெயமோகன் எழுதியிருந்தார். அதே வாழ்க்கை என்பது “நம் குழந்தைகளுக்கு அந்நியர்களாக ஆகிக்கொண்டே இருப்பதுவும்தான்” என்கிற வரியை நான் நேற்று கண்டடைந்தேன். அவனோடு சேர்ந்து சிரித்துக்கொண்டே, "ஆம். நான் உனக்கு ஒரு ஆகந்துக்" என்றேன்.

உண்மையைத் தேடி..

படம்
ஒ ரு சமூகத்திலிருந்து உருவாகி வரும் கலைப் படைப்புகளின் செயற்கைத்தனத்துக்கும், அந்த சமூகத்தின் செயற்கைத்தனத்துக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கிறது. செயற்கைத்தனங்களே  யதார்த்தமாகிவிட்ட தோற்றத்தைத் தரும் உணர்திறனற்ற சூழலிலிருந்து உன்னதமான கலையை உருவாக்குவதற்கான அக தரிசனங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. எதிலுமே விதிவிலக்குகள் உண்டு என்றாலும், யதார்த்த வாழ்க்கையிலிருந்தே யதார்த்தமானதொரு படைப்பை எளிதாக உருவி எடுக்க முடியும். மாறாக செயற்கைத்தனங்களுக்குப் பழக்கப்பட்டு விட்ட ஒரு சமூகத்திலிருந்து பிறக்கும் கலைப் படைப்புகளும் செயற்கைத்தனமாக இருப்பதில் வியப்பு என்ன இருக்கிறது. உதாரணத்துக்கு சத்யஜித் ரே சென்னையில் இருக்கும் ஒரு தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் ஒரு நாள் பணிபுரிகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த அனுபவத்தைக் கொண்டு அவர் என்ன திரைப்படம் எடுத்துவிட முடியும்? தரமான ஒரு குறும்படம்கூட எடுக்க முடியாது. உண்மையும் உணர்திறனும் அற்றுப் போனதொரு சூழல் அது. முகநூலுமே அப்படிப்பட்டதுதான். தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தின் பின்னணியில்தான் "முடி" சிறுகதையை எழுதினேன். ஆனால் குறிஞ்சிமலர்

"டூ மச்"

கேள்வி : "என்ன மாதவன்? இவ்வளவு அருமையான (தமிழ்) திரைப்படத்தை பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே? இந்த காலத்தில் அவசியம் பேச வேண்டியதைத்தானே பேசியிருக்கிறார்கள். நல்ல கதைத்தானே? உங்களின் எதிர்பார்ப்புதான் என்ன? திஸ் ஈஸ் டூ மச்." பதில் : அவசியம் பேச வேண்டிய விஷயம்தான். இதில் உங்கள் கருத்தேதான் என்னுடையதும். நாம் இருவருமே காண விரும்புவது அலைகளைத்தான். அந்த அலைகள் எப்படி உருவாக வேண்டும் என்பதில்தான் நாம் வேறுபடுகிறோம். உங்களுக்கு சக்திவாய்ந்த புயலொன்று கடலில் உருவாக வேண்டும். கடல் கொந்தளிக்க வேண்டும். பெரும் சீற்றத்துடன் சுழன்று அடித்துக்கொண்டு அந்தப் புயல் கரையை நோக்கி நகர்ந்து அலைகளை உருவாக்க வேண்டும். கடலின் கொந்தளிப்பைப் பாருங்கள். சீறி வரும் புயலைப் பாருங்கள் என்று கூறுகிறீர்கள். இது போதாதா என்று கேட்கிறீர்கள். நான் பெரிதினும் பெரிது கேட்பவன். நான் காண விரும்புவது ஆழிப்பேரலைகளை. கடலின் மேல்மட்டத்தில் உருவாகும் புயல்களுக்கு சுனாமிகளை உருவாக்கும் ஆற்றல் இல்லை என்று நம்புகிறேன். ஆழ்கடலின் அடித்தளத்தில் எவர் கண்களுக்கும் தெரியாமல் அதிர்ந்து சுனாமிப் பேரலைகளை உருவாக்கும்