இடுகைகள்

மார்ச், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முன்னைப் பிறவியில்...

(கவிதைக்கதை) இம்மையில் , என் பெயர் வேதநாயகம் . காதலில் விழுந்து , திருமணம் முடிந்து , ஐந்து ஆண்டுகளோடிய பின்னும் மழலை இல்லை வீட்டினிலே ! முதல் குழந்தை , கருவிலே மரித்தது ! இரண்டாவது , இறந்தே பிறந்தது ! மூன்றாவதோ , பிறந்து இறந்தது !       உற்றார் உறவினர் - துரத்தி அடித்தனர் ! மருத்துவம் பாரென்றனர் ! கருக்காவூர் போவென்றனர் !  திருமலை நடவென்றனர் ! தானம்புரி என்றனர் ! அவர்தம் பரிகாசப் பேச்சுகளைக் கேட்டுக்கேட்டு , நாணிக் குறுகினோம் , நானும் என் மனையாளும் ! ஓடி ஒளிந்தோம் . உற்றார் உறவினரின் , தொடர் பறுத்தோம் ! ‘ மூலகாரணம் அறிந்திடல் ’ முக்கிய மென்றார் , நண்பர் ஒருவர் . அவர் நாடச் சொன்னது ' நாடி சோதிடம் '! ' நாடி ' நாடித் தேடி ஓடினேன் - வைத்தீசுவரன்கோவில் !    ஓலைகள் பல அலசியபின் சோதிடர் சொன்னார் என்னிடமே : " முன்னைப் பிறவியில் நீ , ‘ அந்தத் தீவினில் ’ பிறந்தவன் ! பந்துக் களுடன் கூட்டாய் ,  செய்தாய் பல நீ உயிர்வதைகள் . அதற்கு வில