வெகுதொலைவில்..

அது ஒரு நதிப்பிரவாகம்.
அதன் கரையோர மரத்திலிருந்து
காற்றில் உதிர்ந்த 
இலையென விழுந்தேன்..
அடித்துச் சென்றது பிரவாகம்.
இருப்பினும் எப்படியோ
சுழிக்குள் சிக்காமல் 
சிதையாமல் மூழ்காமல்
லாவகமாய் அதன்மேலே
தவழ்ந்து சென்று
வேறேதோவோர் கரையில் 
ஒதுங்கியபோதுதான் உணர்ந்தேன் -
'
என்னை விட்டு நான்
வெகுதொலைவு வந்துவிட்டதை!'.

(
எண்ணத்தூறல் - 6)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..