இடுகைகள்

அக்டோபர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அணைக்கப்படாத கைபேசி

நீண்ட நாட்களுக்குப் பின் நண்பன் ஒருவனைத் தொலைபேசியில் அழைத்தேன். நீ நலமா? நான் நலம். வாழ்க்கை எப்படி? அது சுகம். இங்கும் அதே. வேலை எப்படி? எப்போதும் போல் நன்றாகவே செல்கிறது. இங்கும் அப்படியே. பிள்ளைகள் வேகமாய் வளர்கிறார்கள். அதே அதே. சென்னையில் மழை. பெல்கியத்தில் வெயில். சென்னை வந்தால் சந்திக்கவேண்டும். கண்டிப்பாய். அடிக்கடிப் பேசவேண்டும். இப்படியே. விடைபெற்றுக்கொண்ட நண்பன் அழைப்பதுபோல் உணர்ந்து மீண்டும் கைபேசியை காதோடு அணைத்தேன். பதினைந்து நிமிடங்கள் அவன் சொல்லாத துயரங்களையும், மறைத்த வலிகளையும் மூன்று நிமிடங்களில் விரிவாக எடுத்துரைத்தது நண்பனின் அணைக்கப்படாத கைபேசி. (முகநூல் நிலைத்தகவல்-18/10/2014)