மதிப்புரை.காம் தளத்தில் புத்தக மதிப்புரை.. (2)
மதிப்புரை.காம் தளத்தில் மற்றுமொரு மதிப்புரை. இந்த மதிப்புரையை எழுதியிருக்கும் மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா மற்றும் இதற்கு முந்தைய மதிப்புரையை எழுதியுள்ள பா. பூபதி இருவரும் நான் அறிந்திராதவர்கள். வாசகர்கள் இவ்விருவரின் விமர்சனங்களையும், கருத்துகளையும் பெருமதிப்புடன் ஏற்றுக்கொண்டு, இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! 'காதிரைச்சல்' எனும் கொடுங்கனவில் உழன்று கொண்டிருக்கையில் மதிப்புரை.காம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த மதிப்புரைகள் சற்று ஆறுதல் அளிக்கிறது. காதிரைச்சலைப் (Tinnitus) பற்றி விரிவாக எழுதுகிறேன். மா. ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா அவர்களின் மதிப்புரை: ஆசிரியர் தன் முன்னுரையிலேயே இப்புத்தகத்தின் முழு அறிமுகத்தையும் செய்துவிட்டார். அவர் கூறுவது போல இப்புத்தகம் புலம் பெயர்ந்தவர்களின் பண்பாட்டுப் பிரச்சனைகளைப் பற்றி மட்டும் பேசுவதாய் தோன்றினாலும், பல விழுமியங்களைத் தொட்டே செல்கிறது. இச்சிறுகதைத் தொகுப்பு பதினைந்து சிறுகதைகளைக் கொண்டது. இதுமட்டுமன்றி இந்தத் தொகுப்பைப் படிக்கத் தூண்டுவதாக ஆசிரியரின் அறிமுகவுரையில் அவரின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வை வ