இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்

பொ ள்ளாச்சியில் தாவரவியல் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமதி.லோகமாதேவி அவர்கள் என்னுடைய " முடி " சிறுகதையை வாசித்துவிட்டு எழுதிய கடிதம். ஜெயமோகன் அவர்களுக்கு நான் அனுப்பிய கடிதங்கள் மூலமாக என்னை அறிந்திருக்கிறார். முடி சிறுகதையை ஆழ்ந்து வாசித்ததோடல்லாமல், அதிக நேரம் எடுத்துக்கொண்டு இவ்வளவு நீண்டதொரு விமர்சனம் எழுதியதற்கு அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி! இனி.. லோகமாதேவி அவர்களின் விமர்சனம்:  “ முடி ” படித்தேன். நீண்ட கதையாக நேற்று தோன்றியது இன்று ஆழ்ந்து படித்த போது மிகவும் சிறியதாகி, அதுக்குள்ள முடிஞ்சுருச்சா எனும் உணர்வை தோற்றுவித்தது.  முதலில் இந்தக் கதைக்கு உங்களுக்கு என் பாராட்டுக்கள், உங்களின் எழுத்து நடை மிக வித்தியாசமான ,நேரடியான ஆனால் ஒரு சீரோடு அழகாகனதாய் இருக்கிறது. ஜெயமொகன் அவர்களின் மொழி நடைக்கும், தற்போது அதிகம் படிக்கும் காட்சன் மற்றும் ஷாகுல் அவர்களின் மொழிநடைக்கும்  உங்களின் இந்த style-க்கும் நல்ல வேறுபாடு தெரிகிறது.  ஷாகுல்  எழுத்துக்களில் குமரித்தமிழ் மணக்கிறது, காட்சனின் நடையிலோ விவிலியத்தின் செல்வாக்கு புலப்படும். உங்கள் மொழி நடை மி

ஜெயமோகன் - நீர், நிலம், நெருப்பு

அ ன்பு ஜெயமோகன்,  அஜிதன் இயக்கிய ஆவணப்படத்தைப் நேற்று பார்த்தேன். அருமையான ஆக்கம். அஜிதனுக்கு என் வாழ்த்துக்கள்! ஜெயகாந்தன் அவர்களைப்  பற்றிய ஆவணப்படத்துக்குப் பிறகு நான் ரசித்த ஆவணப்படம் இது. தமிழ் இலக்கிய உலகின் மற்ற மேதைகளைப் பற்றியும் ஆவணப்படங்களையும் அஜிதன் எடுப்பார் என்று நம்புகிறேன். அவரது முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.   "ஜெயமோகன் - நீர், நிலம், நெருப்பு" ஜெயமோகன் அவர்களைப் பற்றி அவருடைய மகன் அஜிதன் எடுத்திருக்கும் ஆவணப்படத்தை நண்பர் ரமேஷ் நேற்று பகிர்ந்திருந்தார்.    அருமையான ஆக்கம்! நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக் கும் இந்த ஆவணப்படம் முழுக்க ஜெயமோகன், தான் சிறுவனாக இருக்கும் போது ரத்னபாலாவில் வெளிவந்த அவருடைய முதல் சிறுகதையில் தொடங்கி வெண்முரசு வரையிலான அத்தனைப் படைப்புகள், அவற்றைப் படைக்கும் பொழுது வாழ்ந்த இடங்கள், சூழல், சிறுவயது நினைவுகள், அவருடைய பெற்றோர்கள் , அவர்களின் பெற்றோர்கள், காதல் மனைவி, பிள்ளைகள், குருநாதர், வீடு என்று எல்லாவற்றைப் பற்றியும் மிகவும் இயல்பாக பேசிக்கொண்டே செல்கிறார்.   அவருடைய பெற்றோர்களைப் பற்றி ஏற்கனவே அறிந்ததுதா

ஒரு கட்டுரை.. ஒரு கனவு..

படம்
சு ஜாதா தன்னுடைய அம்பலம் இணைய இதழில் பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய குறுங்கட்டுரை ஒன்றை வாசித்துக்கொண்டிருந்தேன். கனமான விஷயங்களைப் பற்றி வாசித்துக்கொண்டிருக்கும் போதெல்லாம் இடையில் சுஜாதாவைக் கையில் எடுத்துக்கொள்வேன். மனதை லேசாக்கிவிடும் சக்தி படைத்தது அவருடைய எழுத்து. அவருக்குப் பிறகு அந்த இடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை. இந்தக் குறுங்கட்டுரையில் அவர் அதற்கு முந்தைய வாரம் விகடன் 'கற்றதும் பெற்றதும்' தொடரில் தனக்கு எழுபது வயதானதைப் பற்றி எழுதிய கட்டுரைக்கு வந்த விமர்சனங்களைப் பற்றி எழுதியிருந்தார். தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பாராட்டுக்கள் குவிந்ததாம். ஜெயமோகன் அந்தக் கட்டுரையை வாசித்து விட்டு அது சுஜாதா எழுதிய சிறந்த கட்டுரைகளில் ஒன்று என்று கூறியிருக்கிறார். ஜெ-யின் மனைவி அருண்மொழி அதை 'சோகமும் வருத்தமும் நிரம்பிய எழுத்து' என்று கூறினாராம். 'ஹாய்' மதன் தனக்கு எப்போது இப்படியெல்லாம் எழுத வரும் என்று கேட்டாராம். அதற்கு சுஜாதா 'எழுபது வயதானதும்' என்று கூறியிருக்கிறார். இந்தக் கூர்மையைத்தான் நாம் சுஜாதாவின் மரணத்தோடு தொலைத்துவிட்டது.  

3.39-வது நிமிடத்தில் கலிலியோவும், வின்சென்ஸோவும்

படம்
ஒ ரே சமயத்தில் உயரத்திலிருந்து கீழே விடப்பட்ட வெவ்வேறு எடைகொண்ட பொருட்கள் தரையைத் தொட எடுத்துக் கொள்ளும் நேரம் அவற்றின் எடையைப் பொறுத்தது என்கிறது அரிஸ்டாட்டிலின் புவியீர்ப்புத் தத்துவம். இது தவறு என்பதை நிரூபிக்க கலிலியோ நானூறு வருடங்களுக்கு முன்பு பைசா சாய்ந்த கோபுரத்திலிருந்து வெவ்வேறு எடையுள்ள இரண்டு கோளங்களை விழச் செய்து காட்டியதாக அவருடைய மாணவர் வின்சென்ஸோ பதிவு செய்துள்ளார். காற்றுத் தடை காரணமாகவே குறைந்த எடையுள்ள பொருட்கள் சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன என்றும் மேலும் வெற்றிடத்தில் விழச் செய்தால் அவை சீரான வேக மாற்றத்தோடு ஒரே நேரத்தில் தரையை வந்தடையும் என்று அப்போதே கணித்திருக்கிறார். என் கல்லூரி நண்பன் அனுப்பி இருந்த பிரையன் காக்சின் இந்த பி.பி.சி காணொளியின் 3.39-வது நிமிடத்தில் கலிலியோவும், வின்சென்ஸோவும்தான் என் கண்களுக்குத் தெரிகிறார்கள். Look at that! Exactly. Brilliant. (முகநூல் பதிவு: 11 பிப்ருவரி 2016)

குழந்தைகளால் நிரப்புக..

எ ன் மகனுடைய வகுப்பில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தானியர்களும் பெல்ஜியர்களும்தான். அவனுடைய உற்ற நண்பர்கள் ஐந்து பேரில் மூன்று பேர் பாகிஸ்தானியர்களே. அதிலும் அவன் அடிக்கடி உச்சரிக்கும் பெயர் - 'ஹசன்'. அவனும் பாகிஸ்தானியனே. பெல்ஜியத்தில் பள்ளிகளில் வாரத்துக்கு ஒருமுறை அதுவும் அரைமணிநேரம் மட்டுமே மதக்கல்வி போதிக்கப்படுகிறது. கிறித்தவம், இஸ்லாம் என்று எதை வேண்டுமானாலும் பெற்றோர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். மதக்கல்வி விரும்பாதவர்கள் 'நல்லொழுக்க வகுப்பைத்' தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். என் மகன் நல்லொழுக்க வகுப்புக்குத்தான் செல்கிறான். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹசன் இவனிடம், 'நீ ஏன் நல்லொழுக்க வகுப்புக்குச் செல்கிறாய். உன் நாட்டில் கடவுளே கிடையாதா?' என்று கேட்டிருக்கிறான். அதற்கு என் மகன், 'என் நாட்டில் நிறைய கடவுள்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்தக் கடவுள்களைப் பற்றியெல்லாம் நம் பள்ளியில் சொல்லிக்கொடுக்கமாட்டார்கள். அதனால்தான் நான் நல்லொழுக்கம் படிக்கிறேன்' என்று கூறியிருக்கிறான். அதற்கு ஹசன் இவனிடம், 'அப்படியானால் நாம் போய் ஆசிரியரிட

லு.. டோ.. வி.. கோ.., கோ.. டோ.. வி..லு.., க..ட..வு..ள்..

படம்
' அ ன்டூஷாப்லே ' (Intouchables) என்கிற பிரெஞ்சுப் படத்தைப் பற்றியும், குறிப்பாக அதன் பின்னணி இசை பற்றியும் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'தோழா' திரைப்படம் அன்டூஷாப்லேவைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்று கூறுகிறார்கள். தழுவல் மட்டுமா என்பதை நீங்களே பார்த்துவிட்டு முடிவு செய்துகொள்ளுங்கள். நான் சொல்ல வந்தது அந்த படத்துக்கு பின்னணி இசை அமைத்த 'லுடோவிகோ எநௌடி ' (Ludovico Einaudi) எனும் இசை மாமேதையைப் பற்றி. கடந்த வருடத்தில் பல இரவுகள் எனக்கு லுடோவிகோ எனும் கடவுளால்தான் நகர்ந்திருக்கிறது. 'பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்' என்று ஒரு திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் வசனம் பேசியிருப்பார். எனக்கு பேய் பற்றித் தெரியாது. ஆனால் நோய் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித்திரிந்த அரக்கன் டின்னிடஸ். அதனுடனான என் அனுபவங்களை நிறைய எழுதி வைத்திருக்கிறேன். நிச்சயம் விரைவில் வெளியில் வரும். டின்னிடஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில்

Fear no more..

இ ன்றைக்கு தீனன் நூலகத்தில் ஷேக்ஸ்பியரின் 'கம்ப்ளீட் வொர்க்ஸ்' புத்தகம் பார்த்தேன். என் தந்தையின்புத்தக அலமாரியிலும் இந்தப் புத்தகம் இருந்தது. இன்றைக்கும் தேடினால் பரணில் கிடைக்கும் என்று நினைக்கிறேன். சிறு வயதில் இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டியிருக்கிறேன். ஆனால் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஆசிரியர் அருள் ஜோசப் 'Fear no more..' கவிதையை உணர்ச்சிகரமாகத்தான் சொல்லிக்கொடுத்தார். அதில் வரும் chimney sweepers பற்றியெல்லாம் மிக அருமையாக விளக்கம்   கொடுத்து அவர் பாடம் நடத்தினாலும் அந்த விஷயங்களெல்லாம் என்னால் தொடர்புபடுத்திப் பார்க்க முடியாததால் என்னை அது பாதிக்கவில்லை. அருமையான ஆசிரியர். பாட புத்தகத்திலல்லாத பாடல்களையெல்லாம் சொல்லிக்கொடுப்பார். அப்போதெல்லாம் நான் அடிக்கடி பாடிக்கொண்டிருந்த ஒரேயொரு ஆங்கிலப் பாடல் அவர் சொல்லிக்கொடுத்த 'Flying high high.. I am a bird in the sky' பாடல்தான். அது இன்னும் நினைவிலிருக்கிறது. இதுவே அவரின் வெற்றி. 'Fear no more..' எனக்கு மகாகவியின் 'அச்சமில்லை அச்சமில்லை' பாடலைத்தான் நி

எனது போராட்டமும் சில படிப்பினைகளும்..

படம்
மு தலில் நேரம் கிடைக்கும்போது இந்தக் காணொளியை எனக்காகப் பார்க்கவும். டச்சு மொழிதான், ஆனால் ஆங்கிலத்தில் சப்டைட்டிலுடன் பார்ப்பது சிரமமிருக்காது. பிறகு எனது இந்தக் கட்டுரையை வாசிக்கவும். இனி இந்தக் கட்டுரையில் நான்  எழுதி  இருப்பது - என்னைப் பற்றியும், இந்தக் காணொளியில் வரும் பெண்மணியைப் பற்றியும், எங்கள் இருவரின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் பற்றியும்.   'கேபி ஓல்ட்ஹவுஸ்' என்கிற நெதர்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி 'டின்னிட்டஸ்' (Tinnitus) பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். டின்னிட்டஸ் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே அவ்வளவாக இல்லை. நான் முதன்முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என்னுடைய நண்பர்களிடம் கூறிய போது, ஒரு சிலரைத் தவிர யாரும் அதைப்  பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பிரச்சினையின் தன்மை புரியாததாலும், நான் அவர்களுக்கு விளக்கிய விதங்களாலும், ஒரு சிலர் அதை சிரித்துக்கொண்டே கேட்கவும் செய்தார்கள். உறவினர்களிடம் கூறியபோது அவர்கள் பதில்கூட பேசவில்லை. பாவம் அவர்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். அவ்வளவு ஏன். இந்தக் கட்டுரையுமேகூட மிக எளிதாகக் கடந்து செ

முடி

படம்
இ ன்னும்   சில   நாட்களில்   மொத்தமாய் க் கொட்டித் தீர்ந்து விடும் . ஏற்கனவே   பின் மண்டையில் முழுநிலவு உதித்துவிட்டது .   முன் மண்டை தற்காலிகமாகத்   தப்பி   நிற்கிறது . தற்போது   எனக்கிருக்கும்   தீராத மன உளைச்சலுக்குக் காரணமே இந்த   முடிப் பிரச்சினைதான் . முப்பத்தி இரண்டு வயதுதான் ஆகிறது . இன்னும் திருமணம் கூட ஆகவில்லை .   எனக்கு   முன்னால்   நின்றுகொண்டிருப்பவர்களிடம்   என்   வயதைக் கேட்டால் , ' இருபத்தைந்து இருக்கும் ' என்று   கூறுவார்கள் . மாறாக எனக்குப் பின்னால்   இருப்பவர்களிடம் கேட்டால்   ' நாற்பதுக்கு மேல்   இருக்கும் ' என்று உறுதியாகக்    கூறுவார்கள் .     சொன்னால் நம்ப மாட்டீர்கள் . கல்லூரிப் படிப்பு   முடித்து சென்னையில்   வேலைக்கு சென்ற காலத்தில் நான் ஒரு மாடலாக இருந்தவன் . பி . எஸ் . என் . எல் , சென்னை சில்க்ஸ் , ஃபான்டா ,   அப்புறம் கெல்லீசில் இருக்கும் ஏதோ பெயர் தெரியாத துணிக்கடை என்று பல விளம்பரங்களில் நடித்திருக்கிறேன் .   அவற்றில்   பி . எஸ் . என் . எல் விளம்பரத்தில் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் வகையில் தெரிவேன் . மற்ற விளம்பரங்கள் அனை